காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மத்திய சென்னை, வடசென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜகவினருடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: நகரமயமாக்கலை சவாலாக கருதாமல், வாய்ப்பாக கருத வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள் தான் இடம்பெறும். இதில், தமிழகத்தில் உள்ள 3 நகரங்கள் இடம்பெறும். வரும் காலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் போல், எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கப் போகிறது. காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து…

Read More

ரபேல் ஒப்பந்த பேர வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் அவமதிக்கிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ரேபரேலி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பாதுகாப்பு தளவாட கொள்முதல் அனைத்தும் தாய்மாமாக்கள் மூலமோ அல்லது இதர மாமாக்கள் மூலமோ தான் மேற்கொள்ளப்படும். சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்டியன் மிசெல் என்ற மாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால், பா.ஜனதா ஆட்சியில், குவாத்ரோச்சி மாமாவோ அல்லது கிறிஸ்டியன் மிசெலோ இல்லாமல் ராணுவ ஒப்பந்தம் செய்யப்படுவதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது போலும். கிறிஸ்டியன் மிசெல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி நேரத்தை வீணாக்காமல், தனது கட்சி வக்கீலை அவருக்காக ஆஜராக அனுப்பி வைத்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், ராணுவ மந்திரி,…

Read More

போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது, இலங்கை

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பல்வேறு நாட்டு நீதிபதிகளைக் கொண்டு, 18 மாதங்களுக்குள் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், விசாரணையில் அக்கறை செலுத்தாத இலங்கை அரசு, இந்த விசாரணைக்காக மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்குமாறு ஐ.நா.விடம் கேட்டுள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், கால நீட்டிப்பு தரக்கூடாது என்று தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Read More

கோவா முதல்மந்திரியாக பதவியேற்றார் மனோகர் பாரிக்கர்

நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார். 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 13 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள பா.ஜ.க., பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரை முதல்மந்திரியாக முன்னிறுத்தியது. இதையடுத்து, கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா-வை நேற்று முந்தினம் சந்தித்த பாரிக்கர் தனது 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதையடுத்து, மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.  பா.ஜ.க ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ்…

Read More

மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு

இம்பால், மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். முதல்-மந்திரியாக பைரன் சிங் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அடுத்த வாரம் அவர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். யாருக்கும் பெரும்பான்மை இல்லை நடைபெற்று முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி இப்போது 28 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இரண்டாவது பெரிய கட்சியாக 21 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதா வந்துள்ளது. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ், லோக்ஜனசக்தி, சுயேச்சை ஆகியோர் தலா 1 இடங்களையும்…

Read More

அருண் ஜெட்லி ராணுவ மந்திரியாக கூடுதல் பொறுப்பு ஏற்றார்

மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொண்டதால் அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். அவர் தனது ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரையின் பேரில் நிதி மந்திரி அருண் ஜெட்லி ராணுவ மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. அதன்படி அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அருண் ஜெட்லி ஏற்கனவே நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றபோது நிதி மந்திரியுடன் கூடுதல் பொறுப்பாக ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தார். மனோகர் பாரிக்கர் கோவா அரசியலில் இருந்து வரும்வரை சுமார் 6 மாதங்களுக்கு…

Read More

வாரணாசியில் மாபெரும் பேரணி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பேரணியாக சென்று, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கால பைரவர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். சிறப்பு பூஜைகள் பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாரணாசியில் வருகிற 8-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே வாரணாசியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக காலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு மாபெரும் பேரணி நடத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாசலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அஸ்சி, சோனார்புரா பகுதிகளை கடந்து முதற்கட்டமாக காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தது. அங்கு அவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சுமார் 1…

Read More

சிறையில் இருந்து உ.பி. தேர்தலில் போட்டியிடும் கைதிகள்

சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் வழக்கம் உ.பி.யில் தொடர்கிறது. உ.பி. தேர்தலில் குறிப்பாக இறுதிக்கட்ட தேர்தலில் கைதிகள் பலர் சிறையில் இருந்தபடி போட்டி யிடுகின்றனர். இதை அவர்கள் கவுரமாக கருதுகின்றனர். கிழக்கு உ.பி.யின் மகராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வான் தொகுதியில் அமன்மணி திரிபாதி என்ற கைதி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவியை கொன்றதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் கிடைப்ப தாக இருந்த வாய்ப்பு நழுவிவிட்ட தால் சுயேச்சை வேட்பாளர் ஆகி விட்டார். இவருக்கு எதிராக இவரது மாமியார் வீடியோ பதிவு ஒன்றை யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அமன்மணி மட்டுமின்றி, அவரது தந்தை அமர்மணி திரிபாதி (உ.பி. முன்னாள் அமைச்சர்), தாய் மதுமணி திரிபாதி ஆகியோரும் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் பெண் பாடகி…

Read More

இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது: சுஷ்மா சுவராஜ்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 22-ந் தேதி இரவு இனவெறியால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்செயலில், அவரது இந்திய நண்பர் அலோக் மதசானியும், அமெரிக்கரான இயன் கிரில்லாட்டும் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) கைது செய்யப்பட்டார். இனவெறி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று அந்நாடு அதிபர் வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது என்று கூறிஉள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் இயன்…

Read More

மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தபோவதில்லை தேவேந்திரபட்னாவிஸ் உறுதி

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனாவும், 82 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவும் மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேயர் பதவிக்கு  எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் மேயர் பதவி யார் வகிப்பது என போட்டி நிலவி வருகிறது.  84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா மேயர் பதவியை யாருக்கும் விட்டு தரப்போவதில்லை கூறிவருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேயர் அல்லது துணை மேயர் பதவி போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை. மேயர் பதவியேற்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். வரும் 8-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பதவிகளை கைப்பற்ற மொத்தம் 114 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இந்த…

Read More