நேர்மையான மோடிஜியின் ஐந்து ஆண்டுகள் ஆட்சி
வளர்ந்ததடா பாரதம், அதர்மம் விலகியதே சாட்சி
உழலும், கொள்ளையும் ஒழித்து விட்டோமே
ஒரு விழுந்த நாடு, எழுந்திடு கண்டோமே.
பல கட்டங்கள் கூடிய பிரதமரின் திட்டங்கள்
அறியுமே நம் பிரதமருக்கு, மக்களின் தேவைகள்
கழிவறை முதல் சன்னிதானம், விடுபட்டதை சொல்லுங்கள்
தனக்காகவா? நாட்டுக்கே அர்பணித்தார் ஐந்து ஆண்டுகள்
தாய் சேய் நலனுக்கு இந்திரதனுஷ் வந்தது
கூடுதல் தடுப்பு சக்தி; நோய் தாக்கல் விட்டது
உயர் தர சிகிச்சை ஏழைகளுக்கும், ஆயுஷ்மான் பாரத் தந்தது
குடும்ப மருத்துவ செலவு; அந்த கவலை விட்டு சென்றது.
ஏழைகளுக்கும் வங்கியை தந்தது ஜன் தன் திட்டம்
30 கோடி மக்கள் இணைந்த சாதனை பட்டம்
சொந்தமாய் தொழில் செய்ய முத்ரா திட்டம்
நீங்கியது முதலீட்டுக்காக அலைந்த கட்டம்.
மகளின் திருமண செலவு, கைகொடுக்குமே செல்வ மகள்
கட்சேரி விருந்தும் பிரமாண்டம், இல்லையே கஷ்டங்கள்
மகனின் வருங்கால நன்மைக்கு தானே பொன் மகன்
எதிர்காலத்தில், நம்பிக்கையோடு செயல்படுவான் அவன்
ஐந்து கோடி குடும்பங்களுக்கு உஜ்வால திட்டம்
சமையல் அறை ஆனது ஒரு புகையில்லா வட்டம்
மின் விசிறியும் எல் இ டி புல்பும், மானியமே உஜாலா திட்டம்
குறைந்ததே இதனால் நமக்கு மின் கட்டண கஷ்டம்.
பாமர மக்களுக்கும் ஆயுள் காப்பீடு, ஜீவன் ஜோதி பீமா
கை கொடுக்க நமக்கு வேறு எங்கேனும் வருமா?
பிரதமரின் விபத்து காப்பீடு, அதுவே சுரக்ஷா பீமா
கவலை எதற்கு; இனி இயலாமை நம்மை வெல்லுமா?
பொதுநலம் காப்பவருக்கு, உணர்ந்து கை கொடுப்போம்
சிந்தித்து செயல்படுவோம், நாளைய பாரதத்தை காத்திடுவோம்
வஞ்சகரை தடுத்தி நாட்டை காக்க, மலரட்டும் தாமரை
பிரதமர் மோடிஜியின் நல்லாட்சி, மீண்டும் ஒரு முறை.